...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Tuesday, November 25, 2014

                                           முக்கிய செய்திகள் 

1.25.11.2014 அன்று நடைபெறுவதாக இருந்த மாதாந்திர பேட்டி மறு தேதி குறிப் பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது .அஞ்சல் மூன்று ,அஞ்சல் நான்கு சங்கங்களுக்கு தனித்தனியாக மீட்டிங் நடைபெறும் என்ற நிலைபாட்டை ,நமது கோரிக்கையை ஏற்று ,மாற்றி அமைத்த நமது கண்காணிப்பாளர் திரு S .ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் ,உதவி கண்காணிப்பாளர் திரு  TS .ரகுநாத் அவர்களுக்கும் NFPE சங்கங்களின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கிறோம் .

2.திருநெல்வேலி அஞ்சல் பொருள் கிடங்கு கண்காணிப்பாளராக திரு K .இலட்சுமணன் அவர்கள் பொறுப்பேற்கிறார்கள் .

3.திருநெல்வேலி உப கோட்ட அதிகாரி திரு G .செந்தில்குமார் அவர்களுக்கு கூடுதலாக வள்ளியூர் உப கோட்டமும் கொடுக்க பட்டுள்ளது .

4.திருநெல்வேலி கோட்ட அலுவலக ஆய்விற்காக நமது மண்டல தலைவர் திருமதி சாருகேசி IPS அவர்கள் 26.11.2014/ 27.11.2014 ஆகிய இரண்டு நாட்கள் நெல்லையில் இருக்கிறார்கள் 

--------------------------------------------------------------------------------------------------------

0 comments:

Post a Comment