...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, July 2, 2016

                அன்பார்ந்த தோழர்களே !
            ஊதிய குழுவில் மாற்றம் கேட்டு அறிவிக்கப்பட்ட வேலைநிறுத்தம் ரயில்வே துறையின் பெரிய அமைப்பான SRMU ஒரு நிலைப்பாட்டையும் --மற்ற அமைப்புகள் வேறு நிலைப்பாட்டையும் எடுத்துள்ளன .
 ஊழியர் தரப்பின் எந்த கோரிக்கையும் ஏற்கப்படாத நிலையில் போராட்டத்தை தள்ளி வைப்பது ஏற்புடையதல்ல ..ஒருவரை நம்பி தான் மற்றொருவர் என்ற நிலையை மாற்றி NJCA  இதில் உறுதியாக இருக்கவேண்டும் .வருகிற 06.07.2016 அன்று மீண்டும் NJCA கூடி விவாதிக்கும் என்றாலே வேலைநிறுத்தம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக உணர முடியும் .SRMU உடனே அறிவித்துள்ளது .மற்றவர்கள் கடைசி வரை உண்மை நிலையை ஊழியர்கள் மத்தியில்    சொல்லாமல் கீழே  விழுந்தாலும்  மீசையில் மண் ஒட்டாத கதையாக கடைசிநேர வாக்குறுதி -அரசாங்கத்தின் மீது ஏற்படும் தீடீர் நம்பிக்கை என்று வேலைநிறுத்தத்தை தள்ளிவைக்க கூடும்  .
குறிப்பாக அஞ்சல் பகுதியில்   ஊதியக்குழு தான் GDS கோரிக்கைகளை பரிசீலிக்க வேண்டும் என்ற கோரிக்கை காற்றில் போனதா ?
           அஞ்சல் பகுதி ஊழியர்களுக்கு எந்தவித தனி சலுகையும் வழங்காத ஊதியக்குழுவை ஏற்க போகிறோமா ?
           இல்லை வழக்கம் போல் கூட்டத்தோடு கூட்டமாக செப்டம்பர் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்க மட்டும் NFPE அழைக்க போகிறதா ?
                     SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் அஞ்சல்மூன்று 
               

0 comments:

Post a Comment