...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, August 3, 2016

                                      மற்ற கோட்டங்களில் இருந்து 
ஈரோடு கோட்டசெயலர் தோழர் சுவாமிநாதன் அவர்களின்  கவி தாக்கத்தின்  சிறு  துளி 

வாசிக்கவும்... யோசிக்கவும். (பதில் தேடும் கவிதை)

கேள்வி :

யாதும் ஊரே ! 
யாவரும் கேளிர் !

எப்படி வந்தது சேரி ?

                       --- வாலிதாசன் 
                            (ஆனந்த விகடன் சொல்வனம் 02.03.2016)
---------------------------------------------------------------------------------------------------------
        தூத்துக்குடி கோட்ட வலைத்தளத்தில் இருந்து 

தெரிந்து கொள்வோம்...............

    10 வருடம் பணி புரிந்தால் போதும் பென்ஷன் உண்டு என்று சொன்னவர்கள் இன்று அதில் ஒரு திருத்தம் கொண்டு வந்து இருக்கிறார்கள். 58 வயதுக்கு முன் VRS-ல் போனால், வருடத்திற்கு 4% என்ற அளவில் பென்ஷன் குறையும் என்கிறார்கள். 

         சொத்து மதிப்பை GROUP D முதற் கொண்டு சமர்ப்பிக்க வேண்டும் என்பதே  சரியல்ல. இதில் குடும்பத்தில் உள்ள அனைவருடைய சொத்து மதிப்பையும்  சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்திரவு வேடிக்கை. அது  இப்பொழுது மாற்றப் பட்டுள்ளது. 

Centre exempts spouse, children of govt employees from declaring assets under Lokpal.

    “The new law mandates that every public servant shall make a declaration of his assets and liabilities. The clauses in the Lokpal Act regarding submission of such details of their spouse and dependent children have been done away with,” a senior official in Department of Personnel and Training (DoPT) said.
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

             இது நாகப்பட்டினம்கோட்ட செயலர் A . தோழர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் கேள்வி 

தொழிற்சங்க தலைவர்களின் சிந்தனைக்கு!!

      7 வது ஊதிய குழுவின் பாதகமான பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற் தகராறு சட்டத்தின்படி முறையாக வேலை நிறுத்த அறிவிப்பினை தொழிலாளர் ஆணையத்திடம் கொடுத்த தொழிற்சங்கங்களை, வேலை நிறுத்தம் தொடங்குவதற்கு முன் ஏன் தொழிலாளர் ஆணையம் சமரச தீர்வு பேச்சு வார்த்தைக்கு அழைக்கவில்லை. தொழிற்சங்க நிர்வாகிகள் ஏன் மத்திய அமைச்சர்களின் இல்லத்திற்கு சென்று பேச வேண்டும்.

தொழிலாளர் ஆணையம் தானே இருதரப்பையும் அழைத்து பேசி உரிய முடிவு எடுக்க வேண்டும். தொழிலாளர் ஆணையரால் நியமிக்கப்பட்ட தொழிலாளர் சமரச தீர்வு அதிகாரியின் (Labour Conciliation Officer) முன் பேச்சுவார்த்தை நடைபெற்றிருப்பின் இருதரப்பு வாதங்களையும் முறையாக எழுத்து பூர்வமாக பதிவு செய்திருக்க முடியும்.

குறைந்தபட்ச ஊதிய வரம்பை உயர்த்துதல் மற்றும் ஊதியநிர்ணய காரணியில் மாற்றம் போன்ற கோரிக்கைக்கு உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்ற அரசு தரப்பு உறுதிமொழியை எழுத்து பூர்வமாக பெற்றிருக்க முடியும். அமைக்கப்பட உள்ள உயர்மட்ட குழுவில் ஊழியர் சங்கங்களுக்கு பிரதிநிதித்துவம் உண்டா என்பது தெரியவில்லை.


இதற்கு முன் அமைக்கப்பட்ட கேபினட் செயலர் திரு.சின்ஹா கமிட்டியின் பரிந்துரைகள் குறித்த விபரங்கள் இதுவரை வெளியிடப்பட வில்லை. பேச்சுவார்த்தையில் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லையென்றால் தொழிலாளர் உரிமைகளை காக்க சட்டபூர்வ நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ள தலைவர்கள் முன் வருவார்களா?

0 comments:

Post a Comment