...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Wednesday, April 19, 2017

                                    நெல்லை கோட்ட செய்திகள் 
இந்த மாத மாதாந்திர பேட்டி 26.04.2017 அன்று நடைபெறுகிறது .அதற்கான சப்ஜெக்ட்ஸ் ஏதேனும் இருந்தால் 20.04.2017 குள் தெரிய படுத்தவும் .

 நமது அகிலஇந்திய மாநாடு பெங்களுருவில் 06.08.2017 முதல் 08.08.2017 வரை நடைபெறுவதை தாங்கள் அறீவீர்கள் .மாநாட்டில் கலந்து கொள்ள விரும்பும் தோழர்கள் தங்கள் பெயர்களை கோட்டசெயலரிடம் தெரிவிக்கவும் .மேலும் அதற்குரிய ரயில் கட்டணத்தையும் 30.04.2017 குள் செலுத்தவும் .SB A /C  ஜேக்கப் ராஜ் 0072773482 .கட்டண விவரங்கள் இரண்டாம் வகுப்பு =Rs 700 
AC III   TIRERs  1900                 AC II TIRE Rs 2700

புதிய பென்ஷன் குறித்த கருத்தரங்கம் நெல்லையில் மே இறுதியில் நடத்த முடிவு செய்துள்ளோம் .இன்னும் ஓரிரு நாளில் அதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்புகள் வெளிவரும் .எழுத்தர்கள் மட்டுமல்ல NPS திட்டத்தில் உள்ள அனைவரையும் ஒருங்கிணைக்கும் கருதரங்கமாக இது நடைபெறும் .இதை பொறுப்பேற்று நடத்தும் தோழர் G.சிவகுமார் மற்றும் M.நமச்சிவாயம் அவர்களுக்கு தாங்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டு கொள்கிறோம் .

GDS பரிந்துரைகளை விரைவில் அமுல்படுத்த கோரி வருகிற 24.04.2017 அன்று நெல்லையில் மாலைநேர தர்ணா பாளையங்கோட்டையில் நடைபெறும் .அனைவரும் மாலை தர்ணாவில் கலந்து கொள்ளும் படி கேட்டு கொள்கிறோம் .

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி AIGDSU சங்கம் சார்பாக 25.04.2017 முதல் நடைபெறவிருக்கும் காலவரையற்ற வேலைநிறுத்தம் வெற்றிபெற நெல்லை NFPE மனதார வாழ்த்துகிறது 
தோழமையுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் 

0 comments:

Post a Comment