...
..... ...... Welome to the official website of All India Postal Employees union -Tirunnelveli Division... .......NELLAI NFPE .......

Saturday, October 7, 2017

                                               முக்கிய செய்திகள்
அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயமாகிறது .சேமிப்புக்கணக்குகளை தொடங்கும்பொழுது ஆதார் இல்லையென்றால் -அதை பெறுவதற்கு விண்ணப்பித்த ஆதாரங்களை காட்டினாலும் போதும் .பழைய டெபாசிட்டர்களும் தங்கள் கணக்குகளில் ஆதார் எண் இணைக்காதவர்கள் 31.12.2017 குள் இணைத்திட வேண்டும் எனவும் 21.09.2017 நிதியமைச்சக உத்தரவு தெரிவிக்கிறது .
----------------------------------------------------------------------------------------------------------------------
   அஞ்சலக கணக்குகளின் முதிர்வுத்தொகை --மற்றும் மாதாந்திர வட்டிகளை சேமிப்பிக்கணக்குகள் மூலம் தான் கிரெடிட் செய்வது என்பது 01.12.2017 முதல் கட்டாயமாகிறது .இதற்கான அறிவிப்புகளை விரிவாக  செய்வது மேலும் தபால்காரர்களை கொண்டு வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கவும் அறிவுறுத்த படுகிறது (

SB Order No. 15/2017 )

                                   வேலியே பயிரை மேயலாமா ?
              சமீபத்தில் நடைபெற்ற GDS சங்க அங்கீகாரத்திற்கு நடைபெற்ற உறுப்பினர் சரிபார்ப்பின் நடவடிக்கைகளை நிறுத்திவைக்க 03.102017 அன்று அஞ்சல் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது .எந்த சம்மேளனங்களும் எதிர்ப்பு தெரிவிக்காத நிலையில் கூட உறுப்பினர் சரிபார்ப்பின் முடிவுகள் ஆளும் அரசுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளதால் இந்த நடவடிக்கை என்று பேசப்படுகிறது .இது ஒன்றும் புதிதல்ல -ஏற்கனேவே 2015 இல் இலாகா ஊழியர் சங்கங்களுக்கு நடத்தப்பட்ட முடிவுகள் இன்றுவரை வெளியிட அரசுக்கு மனமில்லை காரணம் தங்கள் சங்கம் அதில் வெற்றிபெறவில்லை என்பதுதான் .சுருங்க சொல்ல வேண்டுமென்றால் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு  தயங்குவது மாதிரிதான் .தான் அறிவித்ததை தானே நிறுத்துவது ஒரு முன் மாதிரி நிர்வாகத்திற்கு அழகா ?  வேலியே பயிரை மேயலாமா ?
பானைக்கே பசிக்கலாமா ?
 வாழ்த்துக்களுடன் SK .ஜேக்கப் ராஜ் கோட்ட செயலர் நெல்லை 

0 comments:

Post a Comment